வத்தளை பிரதேசத்தில் 29 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இ.பி. கசுன் சம்பத் என்ற நபரே காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் வத்தளை பொலிஸிற்கு முன்பாக உள்ள Jogging park இற்கு அருகில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
பணிபுரிந்து கொண்டிருந்த அவர் கடந்த 12ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்குப் பின்னர் திடீரென மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் களுத்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரை யாராவது கண்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 076 668 9959 / 077 219 0251 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.