வெள்ளவத்தைப் பகுதியில் ரயில் வண்டியில் மோதுண்டு ஒருவர் பலியானார்.
கொழும்பில் இருந்து தெஹிவளை பகுதியை நோக்கி நேற்று (09) மாலை பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்தார்.
அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு அவரின் சடலம் உருக்குலைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை காவல்துறை முன்னெடுத்துள்ளது.