சில நாட்களுக்கு முன்னர் இறந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சில நாட்களுக்கு முன்னர் இறந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு!


களனி பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்று (18) கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த வீட்டைச் சோதனையிட்டதைத் தொடர்ந்து குறித்த பெண் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் களனி, கோனவல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனவும் அவர் தனியாக வசித்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.


மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நேற்று நடந்தது.மேலும் களனி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.