லொத்தர் சீட்டின் விலையை இருமடங்காக அதிகரிக்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லொத்தர் சீட்டின் விலையை இருமடங்காக அதிகரிக்க அனுமதி!


லொத்தர் சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.


இதன்படி எதிர்காலத்தில் லொத்தர் சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.


தற்போது, ​​ஒரு லொத்தர் சீட்டு 20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், இதன் விலை இருமடங்காக அதிகரிப்பதுடன், லொத்தர் சீட்டுகளில் வழங்கப்படும் பரிசுத் தொகையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.


மேலும், ஜூலை 06ம் திகதி முதல் உரிய விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், அது மீண்டும் பரிசீலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதன்படி, விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் திகதி தொடர்பில் இந்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.