கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்!


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடியை கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன அம்பலப்படுத்தியுள்ளார்.


அதன்படி  தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் பெருமளவிலான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள், சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியானவை எனவும் அரச கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூட்டத்தின் போதே கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்கிரமரத்ன இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.


இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


எனவே, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணரும் பணியைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.