பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் 650 மில்லியன் பெறுமதியான ஹெரோயின்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் 650 மில்லியன் பெறுமதியான ஹெரோயின்!


பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் இருந்து சுமார் 650 மில்லியன் ரூபா பெறுமதியான 16 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.


கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றை பரிசோதித்த போது குளிரூட்டும் அறைகளில் இருந்து 16.193 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


துறைமுகத்தில் உள்ள சுங்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உள்ளக விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, சந்தேகநபர்கள் கடத்தல் பொருட்களுடன் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.