அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை மீளாய்வு செய்யுமாறு அரச நிர்வாக செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியை குழுவொன்று சேலை அல்லது ஒசரி தவிர்ந்த வேறொரு ஆடை அணிந்து பாடசாலைகளுக்கு வந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ஆசிரியை குழுவொன்று சேலை அல்லது ஒசரி தவிர்ந்த வேறொரு ஆடை அணிந்து பாடசாலைகளுக்கு வந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)