இளைஞர், யுவதிகளுக்கு ஆயுதம் தாங்கிய இராணுவப் பயிற்சி வழங்க வேண்டும்! -ரதன தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இளைஞர், யுவதிகளுக்கு ஆயுதம் தாங்கிய இராணுவப் பயிற்சி வழங்க வேண்டும்! -ரதன தேரர்


இலங்கையில் உள்ள 18 முதல் 20 வயதான அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருந்தார். 


அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


நாடு தைரியமும் உறுதியும் இல்லாத நாடாக மாறியுள்ளது. நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுள்ளது. இளைஞர்களுக்கு திடமும் ஆளுமையும் இல்லை. 


10 அடி ஆழமான கிணற்றில் குதித்தாலும் அவர் இறந்து போவார்கள். கடலில் குளிக்க முடியவில்லை. தென்னை மரம் ஏற முடியவில்லை. எமது நாடு எவ்வித தைரியமும் உறுதியும் இல்லாத நாடாக மாறியுள்ளது.


பாடசாலைக்கு செல்லும் 3 லட்சத்து 50 ஆயிரம் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுக்கும் நாம் இராணுவப் பயிற்சியை வழங்க வேண்டும்.


உரிய வயதில் பாடசாலைகளில் சேர்ப்பது போன்று 18 முதல் 20 வயதான அனைவரும் ஆயுதம் தாங்கிய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.