ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிணையில் வந்தவர் வெட்டிக்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிணையில் வந்தவர் வெட்டிக்கொலை!


மட்டக்குளிய பிரதேசத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


வாகனத்தில் வந்த இருவரினால் குறித்த நபர் தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 


2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர் பிணையில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.