எதிர்வரும் 2023 ஜனவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் வெளிநாடு சென்றுவர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளல் உட்பட தனிப்பட்ட காரணங்களால், அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல எதிர்பார்த்துள்ளமையால், அதற்காக அனுமதி வழங்குமாறு, பசில் ராஜபக்ஷ சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இதனைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக, விசாரணை நடத்த அரசாங்கத்துக்கு உத்தரவிடுமாறுகோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.