
ஒரு வாரத்தில் தங்களின் முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோல் கிடைப்பதாகவும், அந்த அளவு பெற்றோல் தமக்கு வாடகைக்கு பயணிப்பதற்கு போதாது எனவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமைகள் காரணமாக முச்சக்கரவண்டிக்கான மாதாந்த கட்டணங்களை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமைகள் காரணமாக உணவுப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 05 லீற்றர் பெற்றோல் வழங்குவதன் மூலம் நாளொன்றுக்கு 720 மில்லிலிற்றர் பெற்றோல் மாத்திரமே தமக்கு கிடைப்பதாகவும், வாடகைக்கு பயணிப்பதற்கு இந்த பெற்றோல் போதாது என்பதனால் உரிய அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களின் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு குறைந்தது 10 லிட்டர் பெட்ரோல் அவசியம் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)