விவசாயிகளுக்கு வசதியாக இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) பிரதானி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
ஜா அல, ஏகல பிரதேச விவசாயிகளை சந்தித்த பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து ஆராய்வதே அமெரிக்கப் பிரதிநிதியின் விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
ஜா அல, ஏகல பிரதேச விவசாயிகளை சந்தித்த பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து ஆராய்வதே அமெரிக்கப் பிரதிநிதியின் விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)