சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுவிட்டு வேலை விசா தருவதாக பொய் வாக்குறுதிகளை வழங்கி பணத்தை ஏமாற்றி மக்களை ஏமாற்றி வரும் கடத்தல்காரர்களை கைது செய்ய இலங்கை பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
சுற்றுலா விசாவில் மலேசியா சென்றதன் பின்னர் அந்த நாட்டில் உள்ள சுற்றுலா அனுமதிப்பத்திரத்தை வேலை விசாவாக மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆட்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மோசடி நடவடிக்கைகளுக்கு இரையாக வேண்டாம் எனவும், அதற்கான முயற்சிகளை தவிர்க்குமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன்னர் தமது வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ளவும், அவ்வாறான மோசடி செய்பவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 119, 118 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் இலங்கை பொலிஸார் மேலும் கேட்டுக்கொள்கின்றனர். (யாழ் நியூஸ்)