ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
சபாநாயகர் தலைமையில் இன்று பிற்பகல் கூடிய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என தீர்மானித்துள்ளனர்.
அதனையடுத்து, சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படும் வகையில் குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தை நியமிக்க கட்சித் தலைவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். (யாழ் நியூஸ்)