தம்மிக்க பெரேராவும் தனது அமைச்சுப் பதவியை துறந்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்மிக்க பெரேராவும் தனது அமைச்சுப் பதவியை துறந்தார்!


முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக பெரேரா தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச பதவி விலகியதால் தம்மிக்க பெரேராவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது.

பசில் ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

வர்த்தகர்கள் நாடாளுமன்றத்திற்கு வரும்போது பின்பற்றப்படும் வழமையான நடைமுறையின் படி தம்மிக்க பெரேராவும் தனக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் நிர்வாக பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு முன்னாள் அமைச்சர் தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.