
தனது முன்னைய கணிப்புகள் ஒருபோதும் தவறாகப் போகவில்லை என்று கூறியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவார் என்பதில் 1000% உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இலங்கை அராஜகத்தை நோக்கிச் செல்வதைத் தடுப்பதற்காக கலந்துரையாடியுள்ளதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)