ஜனாதிபதி நாட்டில் தான் இருக்கிறார்! பிபிசிக்கு தவறுதலாக சொல்லி விட்டேன்! -சபாநாயகர்
Posted by Yazh NewsAuthor-
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் தான் இருக்கிறார், நான் (பிபிசி) நேர்காணலில் தவறுதலாக சொல்லிவிட்டேன் ” என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி நிறுவனமான ANIக்கு தொலைபேசி அழைப்பில் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.