கொழும்பில் தியேட்டர்களுடன் கூடிய சில இடங்களை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் தியேட்டர்களுடன் கூடிய சில இடங்களை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்க தீர்மானம்!

கொழும்பில் குறிப்பிட்ட சில பகுதிகள் வன்முறையற்ற போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பிற்குள் விகாரமஹாதேவி பூங்கா, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் பார்க் போன்றவற்றில், திறந்தவெளி அரங்குகள் (தியேட்டர்கள்) உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய இடங்களை வன்முறையற்ற போராட்டங்களுக்கு வழங்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காலி முகத்திடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு முன்னர் அனுமதியளித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதித்த பிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 'கோட்டகோகம' போராட்டத் தளம் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்))

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.