ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிக்கபடாமல், அவர் பதவி விலகியதாக கருத முடியுமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் தனது இராஜினாமா கடிதத்தை ஜூலை 13 ஆம் திகதி இறுதிக்குள் அனுப்பி வைப்பதாக பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.