ராஜபக்ஷ ஆட்சியின் ஆணை ஒழிக்கப்பட்டு தற்போது நாட்டில் பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எனவே மக்கள் சக்தியின்றி எவராலும் அரசியல் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எவரும் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் அல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள பெரும்பான்மையான இடதுசாரிகளைப் போன்று தானும் தற்போதுள்ள அரசியலமைப்பை ஏற்கவில்லை எனவும் எனவே கூடிய விரைவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க பாடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுடன் இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனநாயகத்தை விட ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், போராட்டத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
எனவே போராட்டத்தை முன்னின்று நடத்தவே முன்னோடிகள் இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறும் அவர், பிரதமரின் வீட்டை எரித்தது ஒரு சதி என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதில் ஈடுபடவில்லை என்றும் கூறுகிறார். (யாழ் நியூஸ்)