ஜூலை 09ஆம் திகதி வர வேண்டிய இந்த கப்பல்கள், வானிலை சீர்கேடு காரணமாக தாமதமாகிவிட்டதாகவும், சரியான நேரத்தில் எரிபொருட்களை கப்பலில் ஏற்றிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் எரிபொருட்களுடன் கப்பல் நேற்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டதை விநியோகஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் உதவியுடன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கான முழு கொடுப்பனவுகளும் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறினார்.