ரட்டா எனப்படும் ரதிது சேனாரத்ன, லஹிரு வீரசேகர, வசந்தமுதலிகே உள்ளிட்ட ஐவர் மருதானை பொலிஸில் இன்று (22) சரணடைந்துள்ளனர்.
சரணடைந்ததையடுத்து குறித்த குழுவினரை கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
கடந்த 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 09 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் ஐவர் கொண்ட குழு சரணடைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)