கடந்த 18ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமைத் தேர்வை வாக்களிக்க உரிமை பெற்ற சில மூத்த உலமாக்களும் கல்வித் தகைமை பெற்ற சில உலமாக்களும் தலைவர் தெரிவை நிராகரிப்பு செய்தனர்.
ஏற்கனவே தலைமைத்துவத்தில் அருப்தி கண்ட இவர்கள் இந்த தலைமைத்துவத்தில்
மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி வந்துள்ளனர்.
முஸ்லிம் சமுகம் தொடர்பில் கடந்த காலத்தில் எட்டப்பட்ட அரசியல் பக்கச்சார்பான, மற்றும் சமூகத்தை தலை குனிய வைத்த செயற்பாடுகள் சம்பந்தமாகவும் இவர்கள் தனிப்பட்ட முறையிலும் பகிறங்கமாகவும் அதிருப்திளை வெளியிட்டு வந்துள்ளனர்.
இதேவேளை நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற இவர்கள் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக மீண்டும் பழைய தலைமைத்துவமே தொடர்வதனால் தங்களின் அசவுகரிகங்களை வெளியிடும் பொருட்டு தங்களின் தலைவர் தெரிவிலான நிலைப்பாட்டை இவ்வாறு வெளியிட்டிருக்கலாம் எனவும் சில உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-பேருவளை ஹில்மி