
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.
பெரேரா அரசியலமைப்பின் 99A (தேசிய பட்டியல்) உறுப்புரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புகிறார்.
வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், பெரேராவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை தொடர்வதற்கான அனுமதியை உயர் நீதிமன்றம் நேற்று பெரும்பான்மை தீர்ப்பில் நிராகரித்தது.
அதனையடுத்து, தம்மிக்க பெரேரா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
அவர் கேபினட் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இலாகாவைக் கைப்பற்றுவார் என்றும் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)