கடவுச்சீட்டு சேவைகள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டு சேவைகள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு நேர ஒதுக்கீடு கட்டாயம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்திற்குச் செல்வதற்கு முன் தனக்கான நேரத்தினை ஒதுக்கிக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் நேர ஒதுக்கீடுகள் இன்றி சேவைகளைப் பெறுவதற்கு வருகை தருவதை அவதானிக்க முடிந்தது.

கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கு நேர ஒதுக்கீடு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இனிமேல் சேவைகள் வழங்கப்படும் என்பதை வருந்தத்தக்க வகையில் அறிவிக்க வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேர ஒதுக்கீடு செய்யாமல் வருகை தரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தவிர்க்க முடியாதது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.immigration.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று அல்லது 070-7101-060 என்ற தொடர்பு இலக்கத்தின் வாயிலாக நேரங்களை ஒதுக்கிக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பொது வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கடவுச்சீட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.