
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனையடுத்து, அது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தின் போது அறிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே பதவி விலகுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)