அதிக விலையில் அரிசி விற்பனை செய்த பிரபல சூப்பர் மார்க்கட் - நடந்தது இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிக விலையில் அரிசி விற்பனை செய்த பிரபல சூப்பர் மார்க்கட் - நடந்தது இது தான்!

கடந்த 02.05.2022 அன்று நுகர்வோர் அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2278/02 இன் படி, ஒரு கிலோ நாட்டு சம்பா ரூ. 220 இற்கும் , ஒரு கிலோ உள்ளூர் சம்பா ரூ. 230 இற்கும், உள்ளூர் கீரி சம்பா ரூ. 260 இற்கும் அதிகமாக விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கொழும்பு பிரதேசத்தில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் உள்ளுர் முன்னணி நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு அரிசி மேற்கண்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் குற்றவியல் திருத்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (27) 500,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் அரிசியின் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.