நாட்டில் தவிர்க்க முடியாத உணவுத் தட்டுப்பாடு விரைவில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் தவிர்க்க முடியாத உணவுத் தட்டுப்பாடு விரைவில்!

அடுத்த மாதத்திற்குள் நாடு கடுமையான நெருக்கடியை நோக்கிச் செல்லும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

"நாங்கள் விரும்பாவிட்டாலும், உண்மை என்னவென்றால், அடுத்த மாதத்திற்குள் நாங்கள் நிச்சயமாக உடைந்துவிடுவோம். யால பருவத்தில் எங்களின் விவசாய உற்பத்தியை மீளப்பெற முடியும் என்பதில் எமக்கு எந்த உறுதியும் இல்லை” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"இது ஒரு சாதாரண சூழ்நிலையாக இருந்தால், நாங்கள் மற்ற நாடுகளிடம் உதவி கேட்டிருக்கலாம், ஆனால் அதை இப்போது செய்ய முடியாது. பெரும்பாலான நாடுகள் உணவு நெருக்கடியை சந்திக்கவுள்ளன” என்று அவர் கூறினார்.

தவிர்க்க முடியாத நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அவசரத் திட்டம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் செயலாளர் வலியுறுத்தினார்.

“எங்கள் கிரெடிட் கார்டுகள் (கடன் அட்டைகள்) மதிப்பற்றதா சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  எதிர்காலத்தில் நாங்கள் வரிசையில் நின்று எரிபொருள் இல்லாமல் வீடு திரும்ப நேரிடலாம்” என்றார்.

மேலும், வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் எந்தப் பயிரை வேண்டுமானாலும் பயிரிட முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“நாம் அனைவரும் அதிகபட்சமாக 10 கிலோ அரிசியை நம் வீடுகளில் வைத்திருக்கலாம், ஆனால் கடைகளில் வாங்க அரிசி கிடைக்காதபோது வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டியிருக்கும். நாங்கள் எரிமலையின் உச்சியில் இருக்கிறோம் என்பதை நீங்கள் இப்போது உணரலாம்” என்று அவர் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.