கடந்த 9 ஆம் திகதி பிற்பகல் கலவரம் இடம்பெற்றமை தொடர்பில் தனக்கு அதே நாள் பின்னேரமே தெரியவந்தது - மஹிந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த 9 ஆம் திகதி பிற்பகல் கலவரம் இடம்பெற்றமை தொடர்பில் தனக்கு அதே நாள் பின்னேரமே தெரியவந்தது - மஹிந்த

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 9 ஆம் திகதி பிற்பகல் கலவரம் இடம்பெற்றமை தொடர்பில் தனக்கு அதே
நாள் பின்னேரமே தெரியவந்ததாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறும் எனத் தெரிந்திருந்தால், இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும், தமது கட்சியினரை அலரிமாளிகைக்குள் நுழைய அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவங்கள் தொடர்பில் தமக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசேட வாக்குமூலமொன்றை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் சுகவீனமுற்றதையடுத்து விடுத்த அறிவிப்பின் காரணமாக கொழும்பில் உள்ள விசேட இடமொன்றில் வைத்து இந்த அறிக்கை பெறப்பட்டது.

எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம் பெறுவதா என்பது சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய தீர்மானிக்கப்படவுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.