விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!


இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பொய்யான தகவல்களை வழங்கியமை தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சசி வீரவன்சவுக்கு ஒரு லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதவான் அறிவித்தார்.

போலி கடவுச்சீட்டை வைத்திருந்தமைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 2015 ஜனவரி 23ஆம் திகதி சஷி வீரவன்சவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

சஷி வீரவன்ச 1967ஆம் ஆண்டு பிறந்ததாகவும், பாஸ்போர்ட் போலியாக அவரது பிறந்த ஆண்டு 1971 எனக் குறிப்பிடப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

சசி வீரவங்சவிடம் இரண்டு பிறந்தநாள் கொண்ட இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இருப்பதாகவும் அந்த நேரத்தில் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.