VIDEO: வாயால் பொய் கூறிய பசில் ராஜபக்‌ஷவின் நாவால் உண்மையை சொல்ல வைத்த ரணில்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: வாயால் பொய் கூறிய பசில் ராஜபக்‌ஷவின் நாவால் உண்மையை சொல்ல வைத்த ரணில்!!!

இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பல தடவைகள் கோரிய போதும் அது கிடைக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இருவருக்குமிடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட வரைவோலை (Draft) மாத்திரமே தனக்கு கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளை கண்டறிவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.

நிகழ்வின் முழு உரையாடலை கீழே காண்க, (யாழ் நியூஸ்)

IMF වාර්තාව ගැන අසා රනිල් - බැසිල් උණුසුම් සංවාදයක...

Posted by Newsfirst.lk on Wednesday, March 23, 2022

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.