பெறுமதி சேர் வரிச்சட்டத்தில் (VAT) திருத்தம் மேற்கொள்ள அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெறுமதி சேர் வரிச்சட்டத்தில் (VAT) திருத்தம் மேற்கொள்ள அனுமதி!


பெறுமதி சேர் வரிச்சட்டத்தில் (VAT) திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்க நிதிப் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.


அரசாங்க நிதி பற்றிய குழு, நேற்று கூடிய போது 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.


பாதீட்டின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு பெறுமதி சேர் வரியானது 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.


குறித்த திருத்தச் சட்டமூலம் நாளைய தினம் (24) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.