இலங்கை கிரிக்கட் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஜெஹான் முபாரக் இற்கு புதிய பதவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கட் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஜெஹான் முபாரக் இற்கு புதிய பதவி!

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் பேரில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, அவிஷ்க குணவர்தன பயிற்றுவிக்கும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஜெஹான் முபாரக் நியமிக்கப்படவுள்ளார்.

மேற்கிந்தித தீவுகளில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் அவிஷ்க குணவர்தனவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.