நாளையும் நீண்டநேர மின்வெட்டு! தகவல் அடங்கிய அறிவிப்பு வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளையும் நீண்டநேர மின்வெட்டு! தகவல் அடங்கிய அறிவிப்பு வெளியானது!


நாளை (24) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.


அத்துடன், P,Q,R,S,T,U,V,W முதலான வலயங்களில், காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 4 மணித்தியலமும் 30 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.00 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.