30 மற்றும் 31 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் சுட்டுக்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

30 மற்றும் 31 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் சுட்டுக்கொலை!

கடவத்தை 9 ஆம் மைல் பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை தமிழில்

24.03.2022 அன்று இரவு கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி வீதியில் மஹர 09 ஆம் மைல்கல் இற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் டி56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் கிரிபத்கொட வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 30 மற்றும் 31 வயதுடைய பேலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சடலங்கள் கிரிபத்கொட வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகப் பேச்சாளர் அலுவலகம்,
பொலிஸ் ஊடகப் பிரிவு
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.