10 மணி நேர மின்வெட்டு விரைவில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 மணி நேர மின்வெட்டு விரைவில்!

அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை இல்லாததால் நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அத்துடன் கெரவலப்பிட்டியவில் உள்ள அனல் மின் நிலையம் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சில பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Update 6.30 PM : மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால், அடுத்த வாரம் மின்வெட்டு கால அளவு 10 மணித்தியாலமாக அதிகரிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.