அரசாங்க அச்சக திணைக்களத்தில் தட்டுப்பாடு; காகிதங்களை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்க அச்சக திணைக்களத்தில் தட்டுப்பாடு; காகிதங்களை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!


அரச புத்தகங்கள் உட்பட அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அச்சு காகிதங்கள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர் இல்லாத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சில காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளன.


இதனால் அரசின் அச்சுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


தற்சமயம் எதிர்வரும் 6 மாதங்களுக்கு போதுமான அச்சு காகிதம் மட்டுமே துறையிடம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவிக்கின்றது.


எதிர்காலத்தில் அச்சடிக்கும் காகிதம் கிடைக்காவிட்டால், அச்சடிக்கும் பணியில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.


எனவே, நிறுவன ஊழியர்கள் காகிதங்களை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.