தனது கணவரால் தீ மூட்டப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது கணவரால் தீ மூட்டப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்!


காலி - கோனபினுவல பகுதியில்  பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரது கணவரால் தீ மூட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கும், அவரது கணவருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதேவேளை, சம்பவத்தில் சிறு எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த பெண் உத்தியோகத்தரின் கணவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.