Update: கண்டி - மடவளையில் சோகம்; மண்சரிவில் சிக்கிய நால்வர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Update: கண்டி - மடவளையில் சோகம்; மண்சரிவில் சிக்கிய நால்வர்!

கண்டி - மடவளை வங்குவகடை பிரதேசத்தில் மண்திட்டு சரிந்து வீழ்ந்ததால் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த 4 பேர் மண்ணுள் புதைந்த சம்பவம் பதிவாகி உள்ளது.

இன்று (07) பிற்பகல் 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றதை அடுத்து, பிரதேசவாசிகள் உடனடியாக செயல்பட்டு மண்ணைத் தோண்டி அவர்களை வெளியில் எடுக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதலில் இரண்டு பேரை வெளியிலெடுத்து வைத்தியசாலைக்கு அனுப்பிய நிலையில் மேலும் கடுமையான போராட்டத்திதன் சுமார் ஒரு மணித்தியாலத்தில் மேலும் இருவரை வெளியில் எடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பிந்திக் கிடைத்த உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி இருவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. (இன்னும் உறுதி செய்யப்படவில்லை)

தினக்கூலி வேலைகளுக்கு வரும் சிலரே இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

-மடவளை நியூஸ்

Update: மூவர் பலியாகியுள்ள நிலையில், ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.