தாக்குதல் சம்பவம்; அருந்திக்க பெர்ணண்டோ மகன் உட்பட 9 பேருக்கு பிணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாக்குதல் சம்பவம்; அருந்திக்க பெர்ணண்டோ மகன் உட்பட 9 பேருக்கு பிணை!


ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உள்ளிட்ட 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராகம மருத்து பீட மாணவர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரால் கடந்த முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்பீடத்தின் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ராகம காவல்துறையினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் என 9 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து. சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.