கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 180 பேர் நேற்று (05) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
முப்பது வயதுக்கு கீழ் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இதன்படி 05 ஆண்கள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். (ஆண்கள் - 24, பெண்கள் - 16)
60 வயதுக்கு மேலானோரும் தொடர்ந்து அதிகளவில் உயிரிழந்து வருகிறார்கள். நேற்றும் 68 ஆண்கள், 65 பெண்கள் என 133 பேர் உயிரிழந்துள்ளனர்.