நாட்டில் மேலும் 3,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 444,130 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,060 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 376,216 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 58,729 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் 215 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 9,400 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.