இதன்போது அவர் 65.61 மீற்றர் எனும் பெறுதியை பதிவு செய்தார்.
சமித்த துலான் கொடிதுவக்கு, கடந்த 2019 இல் துபாயில் இடம்பெற்ற உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 4ஆவது இடத்தை பெற்றதோடு, 2018 ஆசிய பரா விளையாட்டு தொடரில் வெண்கல பதக்கத்தை பெற்றிருந்தார்.
அதற்கமைய, 2020 பரா ஒலிம்பிக்கில் இலங்கை இதுவரை ஒரு தங்கம் உள்ளிட்ட இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
இன்றையதினம் இலங்கையைச் சேர்ந்த தினேஷ் பிரியந்த ஹேரத், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் F46 பிரிவில் புதிய உலக சாதனையுடன் (67.79m) இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பதிவு செய்திருந்தார்.
தங்கப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் ஆணைப் பத்திரம் வழங்கும் அதிகாரியாக இன்று பதவி உயர்த்தப்பட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் அவருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அவர் நாட்டுக்கு வழங்கிய கௌரவத்தை பாராட்டும் வகையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.