2017 இருந்து உரிமை கோரப்படாத 40 சடலங்களை ஒட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்களின் சடலங்களே இவ்வாறு ஒட்டமாவடியில் புதைக்கப்பட்டுள்ளது.
களுபோவில மற்றும் ராகம வைத்தியசாலைகளில் உரிமை கோரப்படாத சடலங்களும் இவ்வாறு புதைப்பதற்கும் தகனம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பிணவறைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.