அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனது அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தனக்கு மேற்கொண்ட ரேப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடன் அண்மை காலத்தில் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.