தாய்மார்களுக்கு கொரோனா இருந்தாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது எந்த பரிசோதனையிலும் தெரியவரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாய்க்கு கொரோனா தொற்று இருந்தாலும், குழந்தைக்கு தொற்று இல்லை என்றாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து முகத்தை ஒதுக்கி வைத்து தாய்ப்பால் கொடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தாய்ப்பாலிலிருந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தியை வேறு எதிலும் பெற முடியாது என்றும் குறிப்பிட்டார்.
சரியான நேரத்தில் தாய்ப்பால் கிடைக்காததால் குழந்தைகளில் புற்றுநோய், குழந்தை பருவ காய்ச்சல் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்ததுவதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஏராளமான தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.