ரிஷாட்டின் மாமனாருக்கு கொரோனா? பிணை மனு கோரிக்கை மறுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாட்டின் மாமனாருக்கு கொரோனா? பிணை மனு கோரிக்கை மறுப்பு!


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மாமனாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


ரிஷாட் பதியூதீனின் மாமனாராகிய அலி இப்ரஹிம் சாய்பு கிதர் மொஹமட் சிஹாப்தீன், ரிஷாட்டின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய 16 வயதான  சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு  மேலதிக நீதவான் நீதிமன்றின் கவனத்துக்கு இன்று (27) கொண்டுவரப்பட்டதுடன் பிணை மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றை காரணமாக கொண்டு, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது எனத் தெரிவித்து பிணை மனுக் கோரிக்கையை மேலதிக நீதவான் நிராகரித்துவிட்டார்.


அத்துடன், சந்தேகநபருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறைச்சாலை திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.