கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
100 ஆண்களும் 94 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பதுன், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 146 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 45 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 03 பேரும் மரணித்துள்ளனர்.
அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 9,185 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 438,421 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,164 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 374,156 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 53,274 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.