தகனம் செய்ய எடுத்து வரப்பட்ட கொரோனா மரணம் தகனம் செய்யாது வேறொரு சடலம் தகனம் - உயர் மட்ட கட்டளை பிரகாரம்!

தகனம் செய்ய எடுத்து வரப்பட்ட கொரோனா மரணம் தகனம் செய்யாது வேறொரு சடலம் தகனம் - உயர் மட்ட கட்டளை பிரகாரம்!

மத்துகம பான்திய தகனம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்து வரப்பட்ட கொரோனா தொற்றுக்கு இலக்கான சடலம் மேல் அதிகாரிகளின் அறிவிப்பை தொடர்ந்து குறித்த சடலம் வெளியேற்றப்பட்டு மற்றுமொரு சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்த 93 வயது பெண்ணின் சடலம் தகனம் செய்வதற்காக மருத்துவமனை நோயாளர் ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் தகனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான சடலம் வெளியே எடுத்து ஆம்புலன்சில் வைக்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாட்டினால் பொது சுகாதார பரிசோதகர்கள் எவ்வாறு பதிலழிப்பது என்று தெரியாமல் சிரமப்பட்டனர்.

குறித்த சடலம் ஆம்புலன்சில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் விளைவாக ஆம்புலன்ஸ் உதவியை பெறவிருந்த மற்றையவர்கள் சிரமத்துக்குள்ளானர்கள் என்றும் சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


Previous News Next News