
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி, பூவெலிக்கடை பகுதியை சேர்ந்த 85 வயது ஆணொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 14ஆம் திகதி கொரோனா நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.
அதன்படி இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 545 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 90,000 ஐ அண்மித்துள்ளது. இன்று (20) இரவு 9.00 மணி வரை 346 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 89,843 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 86,466 பேர் குணமடைந்துள்ளதோடு, 2,645 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
